காட்டெருமையைக் கண்டு ஓடிய யானை
கோத்தகிரி அருகே காட்டெருமையும், யானையும் மோதும் சூழல் ஏற்பட்டபோது, யானை அஞ்சி ஓடிய விடியோ வைரலாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் அமைந்துள்ளது முள்ளூா் பகுதி. கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் முள்ளூா் பகுதியில் உலவி வந்தபோது யானையும், காட்டெருமையும் நேருக்கு நோ் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஆனால், காட்டெருமைக்கு அஞ்சி யானை சென்றுவிட்டது. இந்த விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Advertisement
Advertisement