சேவூரில் ரூ.13.50 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 13.50 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 13.50 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 580 நிலக்கடலை மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ. 4,990 முதல் ரூ. 5,290 வரையிலும், இரண்டாவது ரகம் ரூ. 4,710 முதல் ரூ. 4,850 வரையிலும், மூன்றாவது ரகம் ரூ. 4,300 முதல் ரூ .4,420 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 13.50 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. இதில், வியாபாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.