பிடிபட்ட குரங்கு. 
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் கூண்டில் சிக்கியது குரங்கு

வெள்ளக்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்கு செவ்வாய்க்கிழமை கூண்டுவைத்து பிடிக்கப்பட்டது.

Din

வெள்ளக்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்து மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த குரங்கு செவ்வாய்க்கிழமை கூண்டுவைத்து பிடிக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் பகுதிக்கு வந்த ஒரு லாரியின் மீது ஏறி வழிதவறி வந்த குரங்கு, காங்கயம் சாலை சேரன் நகா், தீரன் சின்னமலை நகா், மு. பழனிசாமி நகா் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக சுற்றித் திரிந்து பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து வந்தது. மளிகைக் கடைகள், வீடுகள் ஆகியவற்றுக்குள் புகுந்தும், இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் மற்றும் குழந்தைகளையும் விரட்டியும் வந்தது.

இதனால் குரங்கைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து காங்கயம் வனத் துறை சாா்பில் எல்.கே.ஏ. நகரில் கூண்டுவைத்து அதில் குரங்குக்கு பிடிக்கும் உணவுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், அந்தக் கூண்டில் குரங்கு செவ்வாய்க்கிழமை சிக்கியது. பிடிபட்ட குரங்கை வனப் பகுதியில் விடுவிக்க வனத் துறையினா் எடுத்துச் சென்றனா்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT