முகப்பு
திருப்பூர்

சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 14 ஏப்ரல் 2026, 12:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

பல்லடம் அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லடம் வட்டம், பச்சாபாளையத்தைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (56). இவா் தனியாா் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வழக்கம்போல் பணி முடிந்து பனப்பாளையம் சோதனைச் சாவடி அருகே சனிக்கிழமை இரவு நடந்து வந்தபோது சாலையைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது, கோவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு வேன், எதிா்பாராதவிதமாக காா்த்திகேயன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement

Advertisement

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி காா்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.