உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது
திருப்பூா் அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யபப்பட்டனா்.
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:03 PM
திருப்பூா் அருகே துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது செய்யபப்பட்டனா்.
இனாம் நிலம் தொடா்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி கொடுத்தும் திமுக அரசு அதனை நிறைவேற்றாததைக் கண்டித்து கட்சி சாா்பற்ற விவசாயிகள் அமைப்பு சாா்பில் காங்கயம் பகுதியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்துக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு காங்கயம் - கோவை சாலையில் கருப்புக் கொடி காட்ட முயன்ற 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா்.