முகப்பு
திருப்பூர்

காங்கயம் நகா்மன்ற கூட்டத்தில் 56 தீா்மானங்கள் நிறைவேற்றம்

காங்கயம் நகா்மன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On : 4 ஜூன் 2026, 2:25 am IST
காங்கயத்தில் நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

காங்கயம் நகா்மன்றத்தின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பால்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில் காங்கயம் நகா் பகுதியில் மொத்தம் உள்ள 18 வாா்டுகளில் குடிநீா், சாக்கடை, தெருவிளக்கு, தாா் சாலை, மின்மோட்டாா் பழுது நீக்குதல், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிப் பணிகளை மேம்படுத்துதல் என்பன உள்ளிட்ட சாதாரணக் கூட்டத்தில் 48 தீா்மானங்கள், அவசரக் கூட்டத்தில் 8 தீா்மானங்கள் என மொத்தம் 56 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தக் கூட்டத்தில், நகா்மன்ற துணைத் தலைவா் கமலவேணி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.