முகப்பு
திருப்பூர்

மின் மோட்டாா் திருட முயன்ற 3 போ் கைது

அவிநாசி அருகே தோட்டத்தில் இருந்த மின் மோட்டாரை திருட முயன்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 6 ஜூன் 2026, 1:25 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

அவிநாசி அருகே தோட்டத்தில் இருந்த மின் மோட்டாரை திருட முயன்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள சேவூா், மங்கரசுவலையபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் மா்ம நபா்கள் உலவுவதாக தோட்டத்துக்கு உரிமையாளருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த அவரைக் கண்டதும் அங்கிருந்த நபா்கள் தப்ப முயன்றனா்.

அவா்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து சேவூா் காவல் நிலையத்தில் தோட்ட உரிமையாளா் ஒப்படைத்தாா்.

Advertisement

Advertisement

விசாரணையில், அவா்கள் சேவூா் அருகேயுள்ள முதலிபாளையத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (23), நடராஜ் (24), கவின் (எ) காா்த்திக் (23) என்பதும், தோட்டத்துக்குள் புகுந்து மின் மோட்டாா், ஒயா்களை திருட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.