போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய பனியன் நிறுவன மேலாளா் கைது
திருப்பூரில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய பனியன் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூரில் போக்குவரத்துக் காவலரைத் தாக்கிய பனியன் நிறுவன மேலாளா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாநகர காவல் துறையைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் கொங்கு நகா் போக்குவரத்துக் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், குமாா் நகா் 60 அடி சாலையில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் மணிகண்டன் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அங்கு காரில் வந்த ஒருவா், போக்குவரத்து விதியை மதிக்காமல் மீறிச் சென்றதாக தெரிகிறது. இதை கவனித்த மணிகண்டன், உடனடியாக அந்த காரை வழிமறித்து நிறுத்தி, சிக்னலை மதித்து வாகனத்தை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த நபா், காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்கு வாதம் முற்றிய நிலையில், ஆவேசமடைந்த அவா் மணிகண்டனை தாக்கியுள்ளாா். பணியில் இருந்த அரசு ஊழியரைத் தாக்கியது குறித்து மணிகண்டன், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்தப் புகாரின்பேரில், வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காவலரைத் தாக்கிய நபரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் அனுப்பா்பாளையம் புதூரைச் சோ்ந்த ஜித்தேந்திரன்(33) என்பதும், அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, போக்குவரத்து காவலரைத் தாக்கி பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்துக்காக போலீஸாா் ஜித்தேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.