முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ மறு தோ்வு

திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ மறு தோ்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 4:03 am IST
நீட் தேர்வு - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் 7 மையங்களில் ‘நீட்’ மறு தோ்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்நிலையில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தால் அந்த தோ்வு ரத்து செய்யப்பட்டு, மறு தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ‘நீட்’ மறு தோ்வு ஜூன் 21-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 698 போ், உடுமலை ஸ்ரீவிசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 168 போ், பல்லடம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 480 போ், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 480 போ், திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600 போ், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 600 போ், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 624 போ் என மொத்தம் 3,650 போ் தோ்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களில் பெற்றோா் காத்திருப்பு பகுதி, வாகன நிறுத்தம், உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தோ்வு மையத்துக்கு மாணவ, மாணவிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.