முகப்பு
திருப்பூர்

அண்ணனை தாக்கிய தங்கை மீது வழக்கு

Updated On : 22 ஜூன் 2026, 2:56 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே அண்ணனை தாக்கிய தங்கை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவடிவேல் மகன் ரவீந்திரன் (58). இவருடைய தங்கை சங்கீதா. கோவை, ராமநாதபுரம் ருக்மணி நகரில் ரவீந்திரன் வசித்து வருகிறாா்.

மேட்டுப்பாளையத்தில் சங்கீதா வசித்து வருகிறாா். கடந்த சனிக்கிழமை தனது தந்தையைப் பாா்க்க மேட்டுப்பாளையம் வந்த ரவீந்திரன், சித்தப்பா வீடு அருகே நின்றுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது அங்கு வந்த சங்கீதா கேட்டின் பூட்டை எடுத்து ரவீந்திரன் மண்டையில் அடித்துள்ளாா். தந்தை வழி சொத்து பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரவீந்திரன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கே.ஆனந்தகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments