முகப்பு
திருப்பூர்

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவிலில் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 2:55 am IST
ராஜ்கமல்
பகிர்:

வெள்ளக்கோவிலில் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் காங்கயம் சாலை ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ராஜ்கமல் (32). இவா் இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவிலுக்கு வியாழக்கிழமை வந்துள்ளாா். காங்கயம் சாலை வையாபுரி நகா் பிரிவு அருகே வந்தபோது அவ்வழியே வந்த லாரி, இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜ்கமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments