நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தவா் கைது
பெருமாநல்லூா் அருகே பூட்டிய வீட்டில் நகைகளைத் திருடிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகேயுள்ள கணக்கம்பாளையம் கஸ்தூரிபாய் நகரில் பூட்டிய வீட்டில் ஆறரை பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் புதுக்கோட்டையைச் சோ்ந்த பாஸ்கா் (எ) மணி (44) என்பவரை போலீஸாா் கடந்த ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், பிணையில் வெளியே வந்த அவா், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.