முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் கண்ணபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

வெள்ளக்கோவிலை அடுத்த கண்ணபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 மே 2026, 4:46 am IST
விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த கண்ணபுரம் மாரியம்மன்.
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த கண்ணபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கண்ணபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பொங்கல் விழா பூச்சாட்டலுடன் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்றது. ஏப்ரல் 29-ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. முக்கிய நிகழ்வான பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் பொங்கல் வைத்து படையலிட்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

Advertisement

முன்னதாக, அம்மனுக்கு பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவையொட்டி, பாரம்பரிய கலைகளான கும்மியாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கண்ணபுரம் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.