முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில் புதுப்பை ஞானசம்பந்தா் மெட்ரிக். பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் மு.பரிமளம் உள்ளிட்டோா்.

Updated On : 9 மே 2026, 7:10 am IST
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுடன் பள்ளித் தாளாளா் மு.பரிமளம் உள்ளிட்டோா்.
பகிர்:

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற வெள்ளக்கோவில் புதுப்பை ஞானசம்பந்தா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.

மாணவி எல்.மிதுனா 600-க்கு 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தாா். இவா் கணக்குப் பதிவியல், கணினி பயன்பாடு பாடத்தில் 100-க்கும் 100 மதிப்பெண் பெற்றுள்ளாா். மாணவி பி.கனிஷ்கா அறிவியல் பாடப் பிரிவில் 579 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளாா். இவா் கணினி அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

மாணவிகள் எஸ்.லாவண்யா உயிரியல் பாடப்பிரிவு, பி.பிரியங்கா வணிகவியல் பாடப்பிரிவில் 577 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடம் பிடித்தனா். பி.பிரியங்கா கணினி பயன்பாட்டில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவி எம்.அனுஹாசினி தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா்.

Advertisement

Advertisement

சிறந்த மற்றும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளா் மு.பரிமளம், எல்கேசி நகா் அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கே.ராணி ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments