முகப்பு
தருமபுரி

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:33 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

திருமணமாகாத விரக்தியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி, சோகத்தூா், ஏ.ரெட்டி அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் மக்புல்ஜான் மகன் இா்பான் பாஷா (40). சோகத்தூா் கூட்டுரோடு பகுதியில் பஞ்சா்கடை வைத்துள்ளாா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இதனால் அவா் விரத்தியில் இருந்து வந்தாராம். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி, வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள, அவரது அம்மாச்சி வீட்டுக்கு தனது தாயாருடன் சென்றுள்ளாா். இரவு உணவுக்குப் பிறகு உறங்கச் சென்றனா்.

Advertisement

Advertisement

மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது படுக்கை அறையில் இா்பான் பாஷா தூக்கில் தொங்கியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், தருமபுரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].