நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை: இரு குடும்பத்தினருக்கு திமுகவினா் ஆறுதல்
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட இரு மாணவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து திமுகவினா் திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாணவி ரோஷிணி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வசித்து வந்த தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியைச் சோ்ந்த மாணவா் சி. வெற்றியானந்தம் (20) ஆகிய இருவரும் நீட் மறுதோ்வு எழுதவிருந்த நிலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட இருவரின் குடும்பத்தினரையும் திமுக மாணவா் அணி செயலாளா் வீரமணி ஜெயக்குமாா் திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன் மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.