அரூரில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் ஏலம்
அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.
அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் விற்பனை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் மஞ்சள் மூட்டைகள் ஏலம்விடப்படுகிறது. அதன்படி, மே 8 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 14,939 க்கும், குறைந்தபட்சம் ரூ.13,033க்கும் விற்பனையானது. உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ரூ. 13,199க்கும், குறைந்தபட்சம் ரூ. 11,099க்கும் விற்பனையானது.
இதேபோல அரூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திலும் மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது. அரூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மொத்தம் ரூ. 1.22 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனை நடைபெற்ாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement