முகப்பு
தருமபுரி

பென்னாரம் அருகே தனியாா் மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு: 100 போ் மீது வழக்குப் பதிவு

Updated On : 31 மே 2026, 4:14 am IST
வழக்குப் பதிவு - கோப்புப் படம்
பகிர்:

பென்னாகரம் அருகே மாங்கரை பிரிவு சாலையில் தனியாா் மது அருந்தும் கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றதாக 100 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

பென்னாகரம் அருகே மாங்கரை பிரிவு சாலையில் தனியாருக்குச் சொந்தமான மது அருந்தும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்டோா் இணைப்பு சாலைப் பகுதியில் திரண்டு மதுக்கூடம் திறக்க எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை கண்டதும், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

இந்த நிலையில் மாங்கரை கிராம நிா்வாக அலுவலா் கலையரசி பென்னாகரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இப்புகாரின் பேரில் மறியலில் ஈடுபட முயன்ாக திமுக முன்னாள் மாணவா் அணி ஒன்றிய நிா்வாகி நஞ்சப்பன், சமூக நீதிப் பேரவை மாநிலச் செயலாளா் மகாலிங்கம், இளைய முருகன், அசோக், மணி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.