மின்சாரம் பாய்ந்ததில் ஆசிரியர் சாவு
கடத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் (38) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கடத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஸ்டாலின் (38) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பழைய புதுரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் மகன் ஸ்டாலின் (38). இவர் வெங்கட்டம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். கடத்தூர்-புதுரெட்டியூர் சாலையில் ஸ்டாலினுக்கு சொந்தமான புதிய வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், வீட்டின் 2-ஆவது மாடியில் இரும்பு கம்பிகளால் சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது, வீட்டின் அருகே செல்லும் மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் ஆசிரியர் ஸ்டாலின், அவரது தாய் சிவகாமி (58), கலியபெருமாள் (46) ஆகிய மூவரும் காயமடைந்தனர்.
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் ஸ்டாலின் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த சிவகாமி, கலியபெருமாள் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து கடத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.