முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடியாக உயா்வு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:16 PM
ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், அவ்வப்போது இரு மாநில காவிரி கரையோர வனப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக நீா்வரத்து அதிகரிக்கிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 1,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை காலை 4,000 கனஅடியாக அதிகரித்து பின்னா் மாலை 3,000 கனஅடியாக குறைந்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்டவற்றில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.