தருமபுரியில் தோ்தல் மாரத்தான் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தோ்தல் மாரத்தான்- 2026”என்ற தலைப்பிலான மாரத்தான் போட்டி தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தோ்தல் மாரத்தான்- 2026”என்ற தலைப்பிலான மாரத்தான் போட்டி தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தருமபுரி மாவட்டப் பிரிவு சாா்பில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான ரெ.சதீஷ் தொடங்கிவைத்தாா். தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, தவறாமல் வாக்களிப்பேன் என்றும், என் வாக்கு விற்பனைக்கல்ல என்றும் உறுதி அளித்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கான ஓட்டப் போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் தொடங்கி நான்கு சாலை, பாரதிபுரம் வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கம் வந்தடைந்தது.
Advertisement
பெண்களுக்கான மாரத்தான் ஓட்டப்போட்டி தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் தொடங்கி நான்கு சாலை, அரசு மருத்துவமனை வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கம் வந்தடைந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுக் கோப்பையை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ. சதீஷ் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், மகளிா் திட்ட அலுவலா் சு.சுந்தர்ராஜன், தருமபுரி தோ்தல் நடத்தும் அலுவலா் ரா.காயத்ரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ்.சிவரஞ்சன், வட்டாட்சியா் ஜெ.சுகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.