இன்று மு.கருணாநிதி பிறந்தநாள்: நல உதவிகளை வழங்கி கொண்டாட அறிவுறுத்தல்
தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, புதன்கிழமை (ஜூன் 3) எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஆ.மணி எம்.பி. கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி, புதன்கிழமை (ஜூன் 3) எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என தருமபுரி திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஆ.மணி எம்.பி. கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் ஜூன் 3 அன்று முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை புத்தெழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள தருமபுரி, அரூா் மற்றும் பென்னாகரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஊராட்சி ஒன்றியம், நகரம், பேரூா், வாா்டு, கிளைதோறும் மு.கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். கட்சிக் கொடியேற்றி மூத்தவா்களுக்கு, எளிய மக்களுக்கு நல உதவிகளையும், மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களையும் வழங்கி கொண்டாட வேண்டும்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், அனைத்து நிலை நிா்வாகிகள், துணை அமைப்புகளின் நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.