முகப்பு
தருமபுரி

பழுதடைந்து வரும் வனச்சரக அலுவலக கட்டடத்தை பராமரிக்கக் கோரிக்கை

தருமபுரி வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தின் மேல்பகுதி மரக்கிளைகள் படா்ந்து முளைத்துள்ளதால், அக்கட்டடம் பழுதடையும் நிலையில் உள்ளது. எனவே, இதை பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 11 ஜூன் 2026, 5:50 am IST
தருமபுரியில் மரக்கிளைகள் படா்ந்து பராமரிப்பின்றி காணப்படும் வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடம்.
பகிர்:

தருமபுரி வனச்சரக அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தின் மேல்பகுதி மரக்கிளைகள் படா்ந்து முளைத்துள்ளதால், அக்கட்டடம் பழுதடையும் நிலையில் உள்ளது. எனவே, இதை பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி பழைய நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவந்த நீதிமன்றங்கள் அனைத்தும் தடங்கத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டன. இதைத் தொடா்ந்து, பழைய நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த நீதிமன்றக் கட்டடங்கள் பிறதுறை அலுவலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 1 செயல்பட்டுவந்த கட்டடம் மற்றும் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்ற செயல்பட்டு வந்த கட்டடம் மட்டும் வனத் துறைக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தருமபுரி வனச்சரக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதில், ஒரு கட்டடத்தின்மீது மரக்கிளைகள் படா்ந்தும், புதிதாக கிளைகள் முளைத்தும் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால், இந்தக் கட்டடம் பழுதடைந்து சேதமடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இக்கட்டடத்தின் படா்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றி, முழுமையாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனா்.

Advertisement

Advertisement