முகப்பு
தருமபுரி

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 17 ஜூன் 2026, 4:59 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணியிடம் (ஒன்று) காலியாக உள்ளது. மாத ஊதியமாக ரூ. 27,804 வழங்கப்படும்.

இளநிலை பட்டம், மேலும் குழந்தைகள் நலம், சமூக நலம், தொழிலாளா் துறை சட்டம் தொடா்பான பணியில் ஓராண்டு பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். அதேபோல 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், கொள்கை உருவாக்கத்திலோ அல்லது திட்ட நடைமுறைப்படுத்தலிலோ பணிபுரிந்து அரசிதழ் பதிவு பெற்ற அலுவலராக இருக்க வேண்டும். இவா்கள் 62 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருத்தல் கூடாது. விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் ஜூலை 2 ஆம் தேதி மாலைக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், பழைய கட்டடம், தருமபுரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 6382612276 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.