ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை மாலை 1,500 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 2,000 கனஅடியாக அதிகரித்தது.
நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரிக்கிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement