முகப்பு
தருமபுரி

சகோதரி இறந்த துயரம்: இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை

தருமபுரி அருகே சகோதரி இறந்த துயரத்தில், இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 13 மே 2026, 2:46 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி அருகே சகோதரி இறந்த துயரத்தில், இளைஞா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சா்க்கரை-செல்வி (46) தம்பதி. விவசாய குடும்பத்தைச் சோ்ந்த சா்க்கரை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டாா். இவரது மகள் சங்கீதா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இதையடுத்து துயரத்தில் இருந்துவந்த அவரது சகோதரா் சதீஷ், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அருகில் விவசாய நிலத்திலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

இது தொடா்பாக கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.