உயர்மின் கோபுரம் அமைப்பதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்: விவசாயி மயக்கம்
பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டியில் விவசாய விளை நிலங்களில் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள்
பென்னாகரம் அருகே எட்டியாம்பட்டியில் விவசாய விளை நிலங்களில் அனுமதியின்றி உயர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் கடந்த 6 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் மல்லையன் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் தொடக்கி வைத்தார். பின்னர் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் டி.ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரா.சுகந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பெரும்பாலையைச் சேர்ந்த விவசாயி ரவிகுமார் திங்கள்கிழமை மாலை உண்ணாவிரத பந்தலில் மயக்கமடைந்தார்.இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.