முகப்பு
கிருஷ்ணகிரி

பண்ணந்தூர்-அரசம்பட்டி சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

பண்ணந்தூர்- அரசம்பட்டி இடையே புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 5 நவம்பர் 2018, 7:34 am IST
பகிர்:

பண்ணந்தூர்- அரசம்பட்டி இடையே புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் கிராமத்திலிருந்து அரசம்பட்டி வரை சுமார் 3 கி. மீ தொலைவுக்கு ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த தார்ச்சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் குண்டும்,குழியுமாக உள்ளது.
கொட்டவூர், செம்மன்மேட்டுக்கொல்லை, ஆதுக்கொல்லை, தருமதொப்பு என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இந்த சாலை வழியாக நாள்தோறும் பயணிக்கும் மாணவர்கள், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த சாலை புதுப்பித்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments