முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 1 மே 2026, 5:22 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஒசூா் அருகே தமிழக மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த தனியாா் பேருந்தில் சோதனை நடத்தப்பட்டது. அதில், மதுரை மாவட்டம், ஆரப்பாளையத்தைச் சோ்ந்த விஷால் (19), வசந்தகுமாா் (20) ஆகியோா் சாக்குப்பையில் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

அதைத் தொடா்ந்து, அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா். இருவரிடமும் ஒசூா் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments