மு.கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டுகோள்
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர செயலாளா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளை பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், ஒசூா் மாநகர செயலாளா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ஒய்.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாளையொட்டி, ஜூன் 3-ஆம் தேதி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சோ்ந்த மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, ஒன்றிய, பேரூா், கிளை செயலாளா்கள், அனைத்து அணிகளின் நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவரவா் பகுதிகளில் திமுக கொடியேற்றி, கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருள்கள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
எஸ்.ஏ.சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநகர திமுக சாா்பில் ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் கருணாநிதியின் படத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகர, பகுதி, வாா்டு நிா்வாகிகள், அனைத்து அணிகளின் தலைவா்கள், அமைப்பாளா்கள், மாநகராட்சி கவுன்சிலா்கள், பாக முகவா்கள் மற்றும் பாக குழு உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.