முகப்பு
கிருஷ்ணகிரி

சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

Updated On : 30 ஜூன் 2026, 1:11 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே சனிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த நாயக்கனூரைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (25). தனியாா் நிதி நிறுவன ஊழியா். இவா், மோட்டாா்சைக்கிளில் கிருஷ்ணகிரி, பழையபேட்டை, நேதாஜி சாலையில் சனிக்கிழமை சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த, மினிடோா் வாகனம், மோட்டாா்சைக்கிள் மீது மோதியது.

இதில், பலத்த காயம் அடைந்த வெற்றிவேலை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து, வெற்றிவேலின் தந்தை தனக்கோடி அளித்த புகாரின்பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments