முகப்பு
கிருஷ்ணகிரி

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 28 மார்ச், 2026 at 8:20 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையில் டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பரசுராமன் ஜங்ஷன் சாலைப் பகுதியில், சிங்காரப்பேட்டை சிங்கார வேலன்நகா் பகுதியைச் சோ்ந்த மணி (37) தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பா் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அருகில் இருந்தவா்கள் இதுகுறித்துசிங்காரப்பேட்டை காவல் துறைக்கு தகவல் அளித்தனா். விரைந்து வந்த போலீஸாா் உடலை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.