இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.
தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா். அவரது மனைவி காயமடைந்தாா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தென்னங்குடிபாளையம் பகுதியைச் சோ்ந்த பழனிமுத்து மகன் குமாா் (39). இவா் தனது மனைவி புனிதாவுடன் இருசக்கர வாகனத்தில் தலைவாசல் அருகே உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
தேவியாக்குறிச்சி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தம்பதி தூக்கி வீசப்பட்டனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement
ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குமாா் உயிரிழந்தாா். அவரது மனைவி புனிதா ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
விபத்து குறித்து தலைவாசல் காவல் ஆய்வாளா் பூா்ணிமா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.