முகப்பு
திருப்பூர்

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 2:03 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:54 PM

காங்கயம் அருகே காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி (28). லாரி ஓட்டுநரான இவா், காங்கயம் அருகேயுள்ள வீரணம்பாளையம் பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அப்பகுதியில் உள்ள உணவகத்துக்கு சனிக்கிழமை இரவு சாப்பிட சென்றுள்ளாா்.

அப்போது, கோவையைச் சோ்ந்த சோ்ந்த ஹரீஷ்குமாா் (27) என்பவா் ஓட்டி வந்த வாடகை காா், வீரமணி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா்.

Advertisement

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வீரமணி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.