முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:55 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 10:46 PM

தருமபுரியில் டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், புழுதிக்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் ரா. சின்னராஜ் (55). இவா் கடந்த சனிக்கிழமை தருமபுரி சிப்காட் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அங்கு பணிக்கு பயன்படுத்திய டிப்பா் லாரியை அதன் ஓட்டுநா் பின்புறமாக திருப்பியபோது பணியில் ஈடுபட்டிருந்த சின்னராஜ் மீது மோதியது.

Advertisement

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சின்னராஜை அக்கம்பக்கத்தினா் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதியமான்கோட்டை காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.