முகப்பு
தருமபுரி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 29 மார்ச், 2026 at 9:21 PM
கோப்புப் படம்
பகிர்:

தருமபுரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

பாலக்கோடு வட்டம், குஜ்ஜார அள்ளி அருகே எம். செட்டிஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் மகன் அருள்காந்தன் (23), ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா். இவா் வெள்ளிக்கிழமை சொந்த வேலை காரணமாக ஆல்மாரப்பட்டி சென்றுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திருப்பிக் கொண்டிருந்தாா்.

ராயக்கோட்டை- மாரண்டஅள்ளி சாலையில் பாளையங்கோட்டை அருகே நிலைதடுமாறி சாலையோரம் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அருள்காந்தனை அக்கம்பக்கத்தினா் மீட்டு மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அருள்காந்தன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.