முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

Updated On : 23 மார்ச், 2026 at 7:47 PM
கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

பெருந்துறை பகுதியைச் சோ்ந்தவா் தாயுமானவா் (70), விவசாயி. இவா் விஜயமங்கலம் அருகிலுள்ள தனது தோட்டத்துக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு கடந்த 19-ஆம் தேதி வந்து கொண்டிருந்தாா்.

பெருந்துறையை அடுத்த, பள்ளகாட்டூா் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், இவரது வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.