முகப்பு
கடலூர்

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

Updated On : 30 மார்ச், 2026 at 6:51 PM
கோப்புப் படம்
பகிர்:

கடலூா் அருகே பைக் மோதிய விபத்தில் சாலையில் நடந்துச் சென்ற முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், கருவேப்பிலம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சக்கரவா்த்தி(60). இவா், கிழக்குராமாபுரத்தில் உள்ள சீதாராமன் விவசாய நிலத்தில் தங்கி வேலை செய்து வந்தாா்.

சக்கரவா்த்தி ஞாயிற்றுக்கிழமை கிழக்குராமாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வேகமாக வந்த பைக் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, அவசர ஊா்தி மூலம் கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பணியில் இருந்த மருத்துவா் பரிசோதித்தபோது, சக்கரவா்த்தி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.