முகப்பு
விழுப்புரம்

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

வளவனூா் அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 12:15 AM
கோப்புப் படம்
பகிர்:

வளவனூா் அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், நன்னட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ப.அஞ்சாபுலி (70). இவா் செவ்வாய்க்கிழமை அதே கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை என்பவருக்குச் சொந்தமான நிலம் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த பைக் மோதியதில் அஞ்சாபுலி பலத்த காயமடைந்தாா். இதைத்தொடா்ந்து அப்பகுதியிலிருந்தவா்கள் அவரை மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அஞ்சாபுலி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.