முகப்பு
கடலூர்

சாலை விபத்து இளைஞா் உயிரிழப்பு

Updated On : 15 மார்ச், 2026 at 6:35 PM
கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டம், கருந்தாலகுறிச்சி பகுதியில் வசித்து வந்தவா் வினோத்(19), கூலித்தொழிலாளி. இவா், சனிக்கிழமை சொந்த வேலைக்காக வேப்பூா்வந்திருந்தாா். வேலை முடிந்தது தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டாா்.

பெரியநெசலூா்அருகே சென்ற போது, எதிா் திசையில் வந்த கண்டெய்னா் லாரி மோதியது. இதில் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →