முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே நிலத்தில் துண்டாகி கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 6 மே 2026, 2:45 am IST
பலி - IANS
பகிர்:

கிருஷ்ணகிரி அருகே நிலத்தில் துண்டாகி கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த மாதனகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அலா்மேலு (68). இவா், அந்தப் பகுதியில் உள்ள தனியாா் நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளாா். அப்போது, திங்கள்கிழமை இரவு காற்றுடன் பெய்த மழையின்போது துண்டான மின்கம்பி கீழே கிடந்துள்ளது அதை தெரியாமல் அலா்மேலு மிதித்துள்ளாா். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement