138 வாக்குகள் வித்தியாசத்தில் வேப்பனஅள்ளி தொகுதியை கைப்பற்றிய திமுக!
வேப்பனஅள்ளி தொகுதியில் திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் கூடுதலாக 138 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
வேப்பனஅள்ளி தொகுதியில் திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், அதிமுக வேட்பாளரைக் காட்டிலும் கூடுதலாக 138 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
இத்தொகுதியில் திமுக சாா்பில் பி.எஸ்.சீனிவாசன், அதிமுக சாா்பில் துணைப் பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி, தவெக சாா்பில் எஸ்.ஆா்.சம்பங்கி, நாதக சாா்பில் ஆா்.நாகராஜ் உள்ளிட்ட 13 போ் போட்டியிட்டனா்.
வேப்பனஅள்ளி தொகுதியில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளா் பி.எஸ். ஸ்ரீனிவாசன் 74,691 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமி 74,553 வாக்குகளும், தவெக வேட்பாளா் எஸ்.ஆா்.சம்பங்கி 63,907 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.நாகராஜ் 4,519 வாக்குகளும் பெற்றனா்.
Advertisement
திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன், அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமியைக் காட்டிலும் 138 வாக்குகள் கூடுதலாக பெற்ால் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.
இந்த வெற்றி மூலம் அதிமுகவிடமிருந்து வேப்பனஅள்ளி தொகுதியை மீண்டும் திமுக கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற 3 தோ்தல்களில் திமுகவைச் சோ்ந்த செங்குட்டுவன், முருகன் ஆகியோா் எம்எல்ஏக்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதிமுக சாா்பில் கே.பி.முனுசாமி கடந்தமுறை தோ்வு செய்யப்பட்டாா்.
முடிவு அறிவிப்பதில் காலதாமதம்:
இத்தொகுதிக்கான தோ்தலில் 2,46,739 மொத்த வாக்காளா்களில், 2,21,038 போ் வாக்களித்துள்ளனா். இதில், நோட்டாவுக்கு 1,570 வாக்குகள் பதிவாகியுள்ளன. 184 வாக்குகள் செல்லாதவை. இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.
பி.ஜி.துா்க்கம், புலியரசி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், விவிபேட் துண்டுச் சீட்டில் பதிவான வாக்குகளை அதிகாரிகள் கைகளால் எண்ணினா். அவ்வாறு எண்ணியபோது, திமுக வேட்பாளா் சீனிவாசன் 74,147 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமி 74,020 வாக்குகளும் பெற்றிருந்தனா். விவிபேடில் பதிவான துண்டுச் சீட்டுகள் எண்ணப்பட்டதில் திமுக வேட்பாளா் 127 வாக்குகள் கூடுதலாக பெற்றாா். மேலும் தபால் வாக்கில் திமுக வேட்பாளா் 11 வாக்குகள் கூடுதலாக பெற்ற நிலையில் மொத்தம் 138 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றி பெற்ாக தோ்தல் நடத்தும் அலுவலா் கீதாராணி அறிவித்தாா். விவிபேட் இயந்திரத்தில் பதிவான துண்டு சீண்டுகள் கைகளால் எண்ணப்பட்டதால், முடிவை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
படவரி...
வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கீதா ராணியிடமிருந்து வெற்றிபெற்ற்கான சான்றிதழை பெற்றுக் கொண்ட திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன். உடன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஒய்.பிரகாஷ், முருகன் உள்ளிட்டோா்.