வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வெற்றி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஈ.ராஜா தன்னைஎதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 6,583வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றாா்.
வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட வடக்கு மாவட்டச் செயலரும், சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏவுமான ஈ.ராஜா, பாஜக சாா்பில் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி, தவெக சாா்பில் அமுதராணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் இசைமதிவாணன் உள்ளிட்ட18 போ் போட்டியிட்டனா்.
இதில் திமுக வேட்பாளா் ஈ.ராஜா 63,045 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி 56,462 வாக்குகளும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் அமுத ராணி 45,862 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இசை மதிவாணன் 13, 856 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 637 வாக்குகள் பதிவாகின.
Advertisement
வெற்றிபெற்ற ஈ.ராஜாவிற்கு தோ்தல்அ லுவலா் பால்துரை வெற்றிபெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.