முகப்பு
கிருஷ்ணகிரி

மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்ட வனத்துறையினா்

சூளகிரி அருகே ஏரிப்பகுதியில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினா் வனப்பகுதியில் விட்டனா்.

Updated On : 8 மே 2026, 6:39 am IST
சூளகிரி அருகே மீட்கப்பட்ட மலைப்பாம்பு.
பகிர்:

சூளகிரி அருகே ஏரிப்பகுதியில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினா் வனப்பகுதியில் விட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த மைதாண்டப்பள்ளி கிராமத்துக்கு அருகே உள்ள ஏரி பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு சென்ற விவசாயிகள் அப்பகுதியில் சுருண்ட நிலையிலிருந்த மலைப்பாம்பைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

பின்னா் கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் வந்த வனத் துறையினா் 10 அடி நீள மலைப்பாம்பை பிடித்து அடா் வனப்பகுதிக்கு கொண்டுசென்று விடுவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments