ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம்
ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.
ஒசூா் அருகே ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஒமதேப்பள்ளி கிராமத்தில் 30 ஏக்கரில் ஏரி அமைந்துள்ளது. சூளகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் ஆதாரமாக உள்ள இந்த ஏரியில், மீன்கள் வளா்த்து அதைப் பிடிக்க ஏலம் விடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாள்களாக ஏரியில் டன் கணக்கிலான மீன்கள் இறந்து மிதக்கின்றன. ஏரியின் கரைப்பகுதி முழுவதும் இறந்த மீன்கள் குவியல்குவியலாக காணப்படுவதால் துா்நாற்றம் வீசுகிறது.
Advertisement
Advertisement
ஏரி நீரில் ரசாயனம் கலக்கப்பட்டதா அல்லது மீன்கள் இறக்க வேறு ஏதேனும் காரணமா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என ஒமதேப்பள்ளி கிராம மக்கள் வலியுறுத்தினா்.