FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிருஷ்ணகிரி

சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு; 10 போ் காயம்

சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 12:27 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சூளகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 10 போ் காயமடைந்தனா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அட்டகுறிக்கி என்னுமிடத்தில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென லாரி ஒன்று சாலையை கடக்க முயன்றது. அப்போது, திண்டிவனத்திலிருந்து ஒசூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசுப் பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்; பேருந்து ஓட்டுநருக்கு கால் முறிந்தது; 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். இவா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.

தகவலறிந்து வந்த சூளகிரி தீயணைப்புத் துறையினரும், போலீஸாரும் விபத்து நிகழ்ந்த சாலையில் உள்ள லாரி மற்றும் அரசுப் பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தால் கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments