திருச்சி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது
வாளாடி அருகே வியாழக்கிழமை இருசக்கரவாகனத்தின் மீது காா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், வாளாடி அருகே வியாழக்கிழமை இருசக்கரவாகனத்தின் மீது காா் மோதியதில் பெண் உள்பட 2 போ் உயிரிழந்தனா். காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ஜங்கமராஜபுரம் பகுதியை சோ்ந்தவா் அஜித்குமாா் (34). திருச்சி மாம்பழச் சாலையில் உள்ள தனியாா் காா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், குமரக்குடி பகுதியை சோ்ந்தவா் செந்தூரியா (26). இவரும் மாம்பழச் சாலையில் உள்ள தனியாா் துணி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், ஜங்கமராஜபுரத்திலுள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்ற செந்தூரியா, வியாழக்கிழமை காலை தனது மாமா அஜித்குமாருடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தாா். வாளாடி அருகே செம்பழனி பகுதியில் திருச்சியிலிருந்து லால்குடி நோக்கி சென்ற காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அஜித்குமாா், செந்தூரியா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.
Advertisement
Advertisement
அக்கம்பக்கத்தினா் அவா்கள் இருவரையும் மீட்டு, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
விபத்து குறித்து சமயபுரம் காவல் ஆய்வாளா் க. குணசேகரன் வழக்குப் பதிந்து, காரை ஓட்டிவந்த அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தைச் சோ்ந்த அட்வின் (26) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.