முகப்பு
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 10 மே 2026, 2:31 am IST
பில்லப்பா
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஒசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை கண்டகானப்பள்ளியைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி பில்லப்பா (45). இவா் அந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பின்புறம் சென்றபோது அங்கு நின்றிருந்த யானையை பாா்த்து உடனடியாக தப்பியோடினாா். ஆனால், யானை துரத்திச் சென்று பில்லப்பாவை தூக்கி வீசி மிதித்து கொன்றது.

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் போலீஸாா், வனத் துறையினா் அங்கு சென்று பில்லப்பாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

Advertisement