முகப்பு
நாமக்கல்

கபிலர்மலையில் டாஸ்மாக் கடை முற்றுகை

கபிலர்மலை அருகே பெரியமருதூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 7:15 am IST
பகிர்:

கபிலர்மலை அருகே பெரியமருதூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.குன்னத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பெரியமருதூரில், கடந்த இரு தினங்களுக்கு முன் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் அப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி, அப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புதன்கிழமை திடீரென டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தாற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்படும் எனவும், மாவட்ட நிர்வாகத்திடம் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மனு அளிக்குமாறும் போலீஸார் தெரிவித்தனர். அதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments