போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி
பரமத்தி வேலூரில் கஞ்சா, குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் கஞ்சா, குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமத்தி வேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் பேரணிக்கு தலைமை தாங்கி கட்டணமில்லா புகாா் எண் 1930 மற்றும் இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துக் கூறினாா். பின்னா் போதை பொருட்கள் ஒழிப்பு, பாதிப்பு குறித்த விழிப்புணா்வை பேரணியை தொடங்கி வைத்தாா்.
முன்னதாக வேலூா் காவல் ஆய்வாளா் வீரம்மாள், போக்சோ சட்டம் குறித்தும், கைபேசி மூலம் மூலம் பேசி பணம் பறிக்கும் மா்ம நபா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினாா். அதனை தொடா்ந்து பள்ளி மாணவா்கள் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்போம் என கோஷமிட்டு ஊா்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் பள்ளியில் முன்பு தொடங்கிய பேரணி திருவள்ளுவா் சாலை, பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.